கொரோனா சித்த மருந்து !
கொரோனா சித்த மருந்து !
--------------------------------------------------
கட்டுரை எண் : 56
வெளியீடு : 22.03.2020
நேரம் : 03:03 Pm
யார் சொன்னது கொரோனா வைரசிற்கு மருந்து இல்லை என்று 🙄
நவீன உலகம் வேண்டுமானால் கண்டுபிடிக்காமல் இருக்கலாம் 🧐
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ் குடி ⚔ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருந்தை கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளார்கள் நமக்காக 🥰
தன்வழிச்சுரம் : 12
புறவழிச்சுரம் : 52
மொத்த சுரத்தின் எண்ணிக்கை : 64
காய்ச்சலை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து...
அதை 64 வகைப்படுத்தி...
நம் சித்த மருத்துவம் அத்தனைக்கும் மருந்து கண்டுபிடித்து...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன ❤
கொரோனா வைரஸ் போல் வைரசால் வரும் பாதிப்புகள் புறவழிச்சுரத்தின் கீழ் வருவது, இது தொற்று மூலம் நுரையீரலை நேரடியாக பாதிக்கும் ஒரு வைரஸ்.
கிருமி மற்றும் வைரசால் ஏற்படும் அனைத்து நுரையீரல் தொற்றுகளுக்கும் சித்தர்கள் கண்டுபிடித்த மருந்து இதோ 👇🏽
கபசுரக் குடிநீர் !
-----------------------------
நூல் ஆதாரம் : சித்த வைத்திய திரட்டு
தேவையான மருந்துகள் !
------------------------------------------------
1.சுக்கு - 35 கிராம்
2 .திப்பிலி - 35 கிராம்
3.இலவங்கம் - 35 கிராம்
4.சிறுகாஞ்சொரிவேர் - 35 கிராம்
5.அக்கிரகாரம் - 35 கிராம்
6.முள்ளிவேர் - 35 கிராம்
7.கடுக்காய்த்தோல் - 35 கிராம்
8.ஆடாதோடை - 35 கிராம்
9.கற்பூரவள்ளி இலை - 35 கிராம்
10.கோஷ்டம் - 35 கிராம்
11.சீந்தில் கொடி - 35 கிராம்
12.சிறுதேக்கு - 35 கிராம்
13.நிலவேம்பு சமூலம் - 35 கிராம்
14.வட்டத்திருப்பி (பாடக்கிழங்கு) - 35 கிராம்
15.முத்தக்காசு (கோரைக் கிழங்கு) - 35 கிராம்
கபசுரகுடிநீர் சூரணம் செய்முறை !
----------------------------------------------------------------
மருந்துச் சரக்குகள் நுண்மையாகப் பொடித்த சலிக்கப்பட்ட நிலையில் 'சூர்ணங்கள்' என்றும், ஒன்றிரண்டாகப் பொடிக்கப்பட்டு சலிக்கப்படாத நிலையில் 'க்வாத சூர்ணங்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
க்வாத சூர்ணங்கள் சித்த மருத்துவத்தில் குடிநீர்செய்து உட்கொள்வதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதால் "குடிநீர் சூர்ணம்" என்று வழங்கபடுகின்றன.
சுத்தமான உலர்ந்த சரக்குகளை ஒன்றிரண்டாகப் பொடித்து நன்கு கலந்தால் கபசுரக் குடிநீர் சூர்ணம் தயார்.
இப்பொழுது இச்சூர்ணத்தை வைத்து கபசுர குடிநீர் எப்படி தயார் செய்து பயன்படுத்துவது என பார்ப்போம்.
கபசுரக் குடிநீர் செய்முறை !
---------------------------------------------------
35 கிராம் குடிநீர் சூரணத்தை 3 லிட்டர் நீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி பன்னிரண்டிலொன்றாய் குறுக்கி வடிகட்டி குடிநீர் எடுக்கவும்.
250ml கபசுரக் குடிநீர் கிடைக்கும்.
அளவு : சிறியவர்கள் 30 மி.லி. பெரியவர்கள் 60 மி.லி. வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் குடிக்கலாம்.
தீரும் நோய்கள் : கிருமி மற்றும் வைரசால் ஏற்படும் அனைத்து நுரையீரல் தொற்று நோய்கள் (கபசுரம்)
கொரோனா வைரசிற்கு இந்த மருந்தை கொடுக்கலாம் என மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய முன்னாள் இயக்குனர் திரு.ஜெகஜோதி பாண்டியன் ஐயா அவர்களும் பரிந்துரை செய்துள்ளார். இது செய்தித்தாளிலும் வந்துள்ளது (செய்தியின் படம் : இணைக்கப்பட்டுள்ளது)
அரசு இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி ஆய்வு செய்து வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார் 🗣
நாமும் அரசு இம்மருந்தை ஆய்வு செய்து மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுப்போம் 📢🥰🙏🏽
நோயாளிகள் தன்னிச்சையாக அல்லாமல் இம்மருந்தை அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவர்களின் கண்காணிப்பில் எடுத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ❤🙏🏽
இனி கொரோனாவை விரட்டுவோமே கபசுரக் குடிநீரால் 🤺🤺🤺
டெங்குவிற்கு நிலவேம்பு குடிநீர் போல் 😍 கொரோனாவிற்கு கபசுரக் குடிநீர் அரசு வழங்கட்டும் 🥰
கேள்வி பதில்கள் ?
1 - கடைகள் மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் ?
பதில் : அனைத்து நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கும்.
2 - கடைகள் மூடிவிட்டார்களே ?
பதில் : நாளை திறப்பார்கள் அல்லது நாட்டு மருந்து கடை உரிமையாளர் வீடு தெரிந்தால் அவர்களை அணுகினால் எடுத்து தருவார்கள் அல்லது சித்த மருந்தகங்கள், சித்த மருத்துவமனைகளில் கிடைக்கும்.
3 - சூரணம் தயார் நிலையில் கிடைக்குமா ?
பதில் : கிடைக்கும் அதன் பெயர் "கபசுரக் குடிநீர் சூரணம்" (Ready made சூரணம் படம் அனுப்புகிறேன்)
4.எத்தனை நாட்கள் குடிக்கவேண்டும் ஐயா ?
பதில் : நோய் தொற்று இல்லாதவர்கள் மூன்று நாட்கள் ஒன்று அல்லது இரண்டு வேளை மட்டும். நோய் தொற்று இருப்பவர்கள் குணமாகும் வரை இரண்டு வேளை காலை மாலை குடிக்கலாம். சித்த மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் குடிக்கலாம்.
5.பகிரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் ஐயா... 🙏🙏 கபசுரக் குடிநீரின் அரசின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வருவது எந்த நிலையில் உள்ளது?
பதில் : அரசின் கவனத்திற்கு நாம் தான் கொண்டு செல்ல வேண்டும் ங்க.
6.Fever illainalum kudikalama nga?
பதில் : தாராளமாக மூன்று நாட்கள் மட்டும் குடிக்கலாம்.
7.மதி தம்பி எனக்கு பத்து பாக்கட் வேணும். அனுப்பி கொடுக்க முடியுங்களா. இந்த கசாயம் சாப்பிட்டால் எத்தனை நாட்களுக்கு உடம்பில் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
பதில் : அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளுக்கு சென்று கேளுங்கள் கிடைக்கும் ங்க. இது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி விடும் பிறகு நீடிப்பது உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் உள்ளது.
ஓம் நமசிவய
நன்றி
இரா.மதிவாணன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Arumai..
ReplyDelete