உயிர் காக்கும் சித்த மருந்துகள்

 

உயிர் காக்கும் சித்த மருந்துகள் 🔱🔥❤️😌🙏🏽
-----------------------------------------------------------------------------------


கட்டுரை எண் : 59

வெளியீடு தேதி : 13.05.2021

வெளியீடு நேரம் : 8.05 Pm

அசாதாரண சூழல் நிலவும் இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஒவ்வொருவரின் இல்லத்தில் இருக்க வேண்டிய எளிய சித்த மருந்துகள் இதோ

இம்மருந்துகளை எந்த எந்த பிரச்சனைகளுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என எனது ஆசான்களின் வழிகாட்டுதல் படி சொல்கிறேன்

இந்த சித்த மருந்துகள் உங்கள் உயிர் காக்கும்

தமிழகத்தின் அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

ஆடாதோடை மணப்பாகு 🔱

சுவாசமிர்தம் 🔱

திரிகடுகு சூரணம் 🔱

ஏலாதி சூரணம் 🔱

அதிமதுரம் பொடி 🔱

பனங்கற்கண்டு 🔱

மகாசுதர்ஷன மாத்திரை 🔱

கபசுரக் குடிநீர் சூரணம் 🔱

நிலவேம்பு குடிநீர் சூரணம் 🔱

அஸ்வகந்தா சூரணம் 🔱

தாளிச்சாதி சூரணம் 🔱

பால சஞ்சீவி குளிகை 🔱

மஹா சுதர்சன மாத்திரை 🔱

பரமானந்தா பைரவம் மாத்திரை 🔱

தேன் 🔱

கடுக்காய் பொடி 🔱

கிராம்பு 🔱

நிலாவாரை சூரணம் 🔱

புதினா உப்பு 🔱

ஒமம் உப்பு 🔱

கட்டி கற்பூரம் 🔱

பச்சை கற்பூரம் 🔱

சோடா உப்பு 🔱

ஓமம் 🔱

வசம்பு 🔱

சுக்கு 🔱

மிளகு 🔱

திப்பிலி 🔱

கோரைக்கிழங்கு 🔱

இலவங்கப்பட்டை 🔱

இலவங்க இலை 🔱

நெல்லி வற்றல் 🔱

ஏலரிசி 🔱

சீரகம் 🔱

பூண்டு 🔱

பொட்டுக்கல்லை 🔱

இஞ்சி 🔱

எலுமிச்சை 🔱

மஞ்சள் தூள் 🔱

கல் உப்பு 🔱

சித்தரத்தை 🔱

கடுக்காய் தோல் 🔱

நாட்டு சர்க்கரை 🔱

தேங்காய் 🔱

இதில் உள்ள சூரணங்கள், மாத்திரைகள், பொடிகள், மணப்பாகு

குறைந்தபட்சம் எவ்வளவு கொடுப்பார்களோ அதை பெற்றுக்கொள்ளுங்கள்

மற்றவைகள் எவ்வளவு பெறனும் என்று பயன்பாட்டில் கீழே குறிப்பிட்டு உள்ளேன்

சளி 🔱
--------------

ஆடாதோடை மணப்பாகு 10 ml

1/2 டம்ளார் வெந்நீரில்

3 வேளை சா.முன் எடுக்கவும்.

அல்சர் மூலம் உள்ளவர்கள் சா.பின் எடுக்கலாம்

குறிப்பு : சளி விரைந்து வெளியேறி குணமாக

செரிமானமாக எளிய உணவு மட்டும் அரை வயிறு எடுங்கள்

சிட்ரஸ் பழங்கள் அதிகம் எடுங்கள்

சளி கரைந்து வெளியேறும்

இருமல் 🔱
---------------------

திரிகடுகு சூரணம்

ஏலாதி சூரணம்

அதிமதுரம் பொடி

இவை மூன்றையும் தனித்தனியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மருந்து 1/2 டீ ஸ்பூன் அளவு தேன் கலந்து எடுத்து வந்தால் ஒரே நாளில் இருமல் சரியாகும்

சுவாசக்கோளாறு 🔱
---------------------------------------

சுவாசமிர்தம் 10 ml

1/2 டம்ளார் வெந்நீரில்

சா.மூன் 3 வேளை

எடுத்தால் சுவாசம் சீராகும்

அதிகம் பிரச்சனை இருந்தால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கூட எடுக்கலாம்

தலைவலி 🔱
--------------------------

கீழே வரும் பதிவில் ஒரு அற்புதமான தைலம் சுவாச தைலம் செய்முறை பதிவிட்டிருக்கிறேன்

தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி

இந்த சுவாசத் தைலத்தை

3 சொட்டு விட்டு ஆவி பிடித்தால்

தலைவலி மற்றும் அனைத்து உடல் வலிகள் கூட காணாமல் போகும்

உடலின் Oxygen அளவை அதிகரிக்க 🔱
--------------------------------------------------------------------

ஒரு டம்ளார் தேங்காய் பாலில்

1 டீ ஸ்பூன் கடுக்காய் பொடி கலந்து எடுங்கள்

மற்றும்

கிராம்பு பொடி 1/4 டீ ஸ்பூன்

ஒரு டம்ளார் தேங்காய் பாலில் எடுங்கள்

2 மணி நேரத்திற்கு ஒரு முறை கடுக்காய் பொடி மற்றும் கிராம்பு பொடி மாற்றி மாற்றி எடுத்து வந்தால் ஒரே நாளில் உடலின் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்

தேங்காய் பால் ஜீரணமாகாதவர்கள்

தேங்காய் பாலில் சிறிது தண்ணீர் மற்றும் இஞ்சி சாறு கலந்து மேல் கூறியது போல் பயன்படுத்துங்கள்

வாந்தி மற்றும் பேதி 🔱
--------------------------------------------

வசம்பை சுட்டு கரியாக்கி

1/4 டீ ஸ்பூன் இந்த வசம்பு கரியில் தேன் கலந்து சப்பி சுவைத்து சாப்பிட்டால்

வாந்தி பேதி நிற்கும்

மேலும்

பேதிக்கு பருத்தி துணியை பச்சை தண்ணீரில் நனைத்து வயிற்றில் போட்டால் பேதி நிற்கும்

உடல் அதீத சோர்வு 🔱
------------------------------------------

ஒரு டம்ளர் வெந்நீரில்

சிறிது தேன் மற்றும் 2 கல் உப்பு கலந்து குடித்தால் உடனடியாக சோர்வு நீங்கும்

மற்றும்

வெந்நீரில் எலுமிச்சை சாறு + கல் உப்பு கலந்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து துப்பினால் உடல் சோர்வு நீங்கும்

மயக்கம் 🔱
---------------------

இரண்டு கை மற்றும் இரண்டு கால்களின் விரல் நுனிகளை 21 முறை அழுத்தி விட்டால் மயக்கம் தெளியும்

மற்றும்

வெந்நீரை காதை சுற்றி முழுவதும் துடைக்கலாம்

உடல் கை கால் வலி அசதி சோர்வு பலவீனம் 🔱
-----------------------------------------------------------------

அஸ்வகந்தா சூரணம்

ஒரு ஸ்பூன் நாட்டு பசும்பாலில் கலந்து

3 வேளை சா.பின்

எடுத்தால் சரியாகும்

நாட்டு பசும்பால் கிடைக்காவிட்டால்

வெந்நீரில் கூட எடுக்கலாம்

மலச்சிக்கல் 🔱
-----------------------------

இரவு சா.பின் நிலாவாரை சூரணம் 1 டீ ஸ்பூன் ஒரு டம்ளர் வெந்நீரில் எடுத்து வந்தால் சரியாகும்

தொடர்ந்து எடுக்கலாம்

சரியான பின் விட்டுவிடலாம்

பெரியவர்கள் 1 ஸ்பூன்

சிறுவர்கள் 1/4 முதல் 1/2 டீ ஸ்பூன் அளவு எடுக்கலாம்

மலம் மற்றும் சிறுநீர் நன்றாக வெளியேறினாலே சளி மற்றும் மூச்சுத்திணறல் சரியாகும்

தீவிர மூச்சுத்திணறல் 🔱
-----------------------------------------------

நான் குறிப்பிட்ட உப்புகளை வைத்து இந்த சுவாச தைலத்தை நீங்களே உங்கள் இல்லத்திலேயே செய்துகொள்ளலாம்

இத்தைலம் மூச்சுத்திணறலை உடனே சரி செய்யும்

ஆவி பிடிக்க பயன்படுத்தலாம்

இயற்கை இன்ஹேலர் ஆக பயன்படுத்தலாம்

உள்ளே மருந்தாக கூட எடுக்கலாம்

உங்கள் முக கவசத்தில் சிறிது தடவலாம்

தேவையான பொருட்கள்

புதினா உப்பு : 50 கிராம்

ஒமம் உப்பு : 10 கிராம்

கட்டி கற்பூரம் : 10 கிராம்

பச்சை கற்பூரம் : 5 கிராம்

சோடா உப்பு : 5 கிராம் (சமையல் சோடா)

செய்முறை

இவை அனைத்தையும் சிறிது இடித்து கண்ணாடி பாட்டலில் கலக்கி வைத்தால் தைலமாக மாறும்

இதை ஆவி பிடிக்கும் போது நீங்கள் பயன்படுத்தும் இலைகளுடன் (துளசி, கற்பூரவள்ளி, நொச்சி) 3 சொட்டு விட்டு ஆவி பிடிக்கலாம், உடனே சுவாசம் சீராகும், சுவாசப்பாதை மற்றும் நுரையீரலில் உள்ள தொற்றுகள்  கிருமி வைரஸ்கள் அழிக்கப்படுகிறது

உங்களுக்கு எந்த இலைகளும் கிடைக்கவில்லை என்றால் சுவாச தைலத்தை மட்டும் பயன்படுத்தி ஆவி பிடிக்கலாம். பிடித்து தான் பாருங்களேன்

நெஞ்சு சளி இருந்தால் ஒரு சொட்டு 1/2 டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்கலாம் ஒரு வேளை மட்டும் சா.பின் ( ulcer, piles உள்ளவர்கள் மட்டும் எடுக்க வேண்டாம்)

இயற்கை இன்ஹேலர் ☺️

ஓமம் : 3 spoon

பச்சை கற்பூரம் : 1 spoon

இவை இரண்டையும் ஒரு துணியில் முடித்து வைக்கவும்

இதில் 5 சொட்டு சுவாச தைலத்தை நனைத்து

மூக்கின் வழியே முகர்ந்து வாய் வழியே விடவும் 10 முறை

பிறகு வாய் வழியே இழுத்து மூக்கு வழியே விடவும் 10 முறை

சுவாசம் சீராகும்

மூச்சுத்திணறல் உடனே சரியாகும்

சளி காய்ச்சல் உள்ள அனைவரும் சுவாச தைலத்தை பயன்படுத்தி ஆவி பிடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்

சாதாரண காய்ச்சல் 🔱
-------------------------------------------

மகாசுதர்சன மாத்திரை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 மாத்திரை எடுத்து வரவும் (இரவு உறங்கும் போது தேவையில்லை)

பீர்கன்காய் (முத்திய காய் வேண்டாம்) தோலுடன் நறுக்கியது + கல் உப்பு (தேவையான அளவு) தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து வடித்து எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் எடுக்கவும்.

நிலவேம்பு காலை சா.பின் எடுக்கவும்

கபசுரக்குடிநீர் இரவு சா.பின் எடுக்கவும்

[ பெரியவர்கள் 60 ml / சிறுவர்கள் 30 ml ]

இந்நான்கும் காய்ச்சலை ஒரு நாள் முதல் 3 நாட்களுக்குள் நிச்சயம் சரி செய்யும்

பசித்தால் அரிசி கஞ்சி / ரசம் சாதம் எடுக்கலாம்

இதில் வெறும் பீர்கன்காய் சாறு மட்டுமே  எடுத்து கூட பலருக்கு காய்ச்சல் சரியாகி உள்ளது

வயதானவர்கள் சளி அதிகம் உள்ளவர்கள் சாறு பிடிக்கவில்லை எனில் நீங்கள் பீர்கன்காயை சூப்பாக எடுக்கலாம் (சீரகம் மிளகு பூண்டு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கல் உப்பு கலந்து சூப்பாக எடுக்கலாம்)

குறிப்பு : ஒரு வேளை, 3 நாள் பயன்படுத்தியும் காய்ச்சல் தொடர்ந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை உடனே சந்திக்கவும்

கொரோனா Positive சரி செய்ய 🔱
---------------------------------------------------------------

ஐமருந்து

கேரள வைத்தியர் கசாயம்

மற்றும்

சாதாரண காய்ச்சலிற்கு சொன்னது

ஐமருந்து

1. அஸ்வகந்தா சூரணம் 🔱

2. தாளிச்சாதி சூரணம் 🔱

3. பால சஞ்சீவி குளிகை 🔱

4. மஹா சுதர்சன மாத்திரை 🔱

5. பரமானந்தா பைரவம் மாத்திரை 🔱

இந்த ஐந்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்

பெரியவர்களுக்கு 2 சிட்டிகை தேனுடன்

சிறியவர்களுக்கு 1 சிட்டிகை தேனுடன்

நன்றாக கலந்து நாக்கில் தேய்த்து சப்பி உமிழ்நீர்கலந்து சுவைத்து சாப்பிடவும்

பாதிக்கப்பட்டவர்கள் 3 வேளை 3 நாட்கள் தொடர்ந்து எடுக்கலாம். மூச்சுத்திணறல் இருந்தால் 5 நாள் வரை எடுக்கலாம்

உணவிற்கு பின் இந்த மருந்தை எடுக்கவும், மருந்து எடுத்த பின் ஒரு மணி நேரம் எதுவும் எடுக்க கூடாது.

பத்தியம் - இனிப்புகள் கட்டாயம் தவிர்க்கவும்*

மற்றும்

கேரள வைத்தியரின் கசாயம்

இது கேரள வைத்தியரால் பகிரப்பட்டு பல வெளிநாட்டு அரசியல்வாதிகள் ஏழே நாட்களில் கொரோனா குணமாகி கேரள அரசே தன் மக்களுக்கு பரிந்துரை செய்த முறை இதோ 👇🏽

தேவையான பொருட்கள் !

சீரகம் - 1 டி ஸ்பூன்

மிளகு - 10 எண்ணிக்கை

பூண்டு - 5 பல்

பொட்டுகல்லை - 3 ஸ்பூன்

இஞ்சி - 1 இன்ச்

எலுமிச்சை - 1/2 பழம் (தோலுடன் விதை நீங்கியது)

லவங்க பட்டை - 1 இன்ச்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கல் உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை !

இதில் உள்ள பொருட்களில் எதையுமே இடிக்கவோ பொடி செய்யவோ கூடாது. அனைத்து மூல பொருட்களையும் அப்படியே 5 டம்ளர் தண்ணீரில் போட்டு 3 டம்ளராக கொதிக்க வைத்து வடித்து இளம் சூடாக பெரியவர்கள் 1 டம்ளர் அளவும் சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும் காலை மாலை என இரண்டு வேளை உணவிற்கு முன் பருகலாம். 3 வேளை பருகினாலும் நலமே.

நமக்கு தெரியாமல் கொரோனா தொற்று இருந்தாலும் இந்த கசாயம் குணமாக்கிவிடும்.

கொரோனா +ve ஐ 7 நாட்களில் நெகட்டிவ் ஆக்கிவிடும் இம்மருந்து

குறிப்பு : சாதாரண காய்ச்சலிற்கு சொன்னதையும் சேர்த்து பின்பற்றவும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை உடனடியாக சந்திக்கவும்

கொரோனா வராமல் தடுக்க 🔱
---------------------------------------------------------

பலர் எங்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா, வீட்டருகே கொரோனா, எங்களுக்கு வராமல் நாங்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என கேட்டீர்கள்

கொரோனா வராமல் காத்துக்கொள்ள

சித்த மருத்துவர் வீரபாபு அவர்களின் மூலிகை தேனீர் எடுக்கலாம்

சுக்கு - 100 கிராம்

அதிமதுரம் - 100 கிராம்

சித்தரத்தை - 30 கிராம்

கடுக்காய் தோல் - 30 கிராம்

மஞ்சள் - 10 கிராம்

திப்பிலி - 5 கிராம்

ஓமம் - 5 கிராம்

கிராம்பு - 5 கிராம்

மிளகு - 5 கிராம்

கற்பூரவள்ளி இலை - 5 எண்ணிக்கை

புதினா இலை - 10 எண்ணிக்கை

நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி

செய்முறை !

இதில் நாட்டு சர்க்கரையை, கற்பூரவள்ளி இலை புதினா இலை தவிர மீது உள்ள அனைத்து மூலப்பொருட்களையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

10 கிராம் பொடியை 400 மிலி நீரில் போட்டு 100 மிலி நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது அதில் கற்பூரவள்ளி இலை புதினா இலை போட்டு, இறக்குவதற்கு முன் நாட்டு சர்க்கரை கலந்து வடித்து இளம்சூடாக பெரியவர்கள் 100 மிலியும் சிறியவர்கள் 50 மிலி என இரண்டு வேளை காலை மாலை உணவிற்கு பின்பு அருந்தலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொடி 🔱
------------------------------------------------------------------

சுக்கு - 25 கிராம்

மிளகு - 25 கிராம்

திப்பிலி - 25 கிராம்

கோரைக்கிழங்கு - 25 கிராம்

இலவங்கப்பட்டை - 25 கிராம்

இலவங்க இலை - 25 கிராம்

நெல்லி வற்றல் - 25 கிராம்

ஏலரிசி - 25 கிராம்

பனங்கற்கண்டு - 350 கிராம்

செய்முறை

சுக்கு தோல் நீக்கவும், கோரைக்கிழங்கு அதன் வேர் குப்பைகளை சுத்தம் செய்து உரலில் ஒன்றிரண்டாக இடித்துக்கொள்ளவும்

இந்த கலவையை ஒரு கிலோவிற்கு மேல் மிசினில் கொடுத்தால் அரைத்து கொடுப்பார்கள்

இதை வீட்டில் மிக்சியில் அரைக்க முடியாது

பயன்படுத்தும் முறை

1/4 tea spoon பொடி

200 ml தண்ணீரில் ஊற்றி

100 ml ஆக கொதிக்க விடவும்

பெரியவர்கள் ஒரு டம்ளர் அளவும்

சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும்

தேனீர் போல் பருகலாம்

தினம் 1 முதல் 3 வேளை வரை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் மற்றும் வாழ்க்கைமுறை 🔱
--------------------------------------------------------------------

Calcium

Vitamin D

Vitamin C

Iron

சத்து உள்ள உணவுகளை எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தினம் ஒரு மணி நேரம் சூரிய ஒளியில் நின்றால் Vitamin D அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

3 முதல் 6 மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

ஆறு அருவி நீரில் குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மழையில் நனைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இரவு இருட்டு அறையில் 9 மணிக்கு உறங்க சென்று ஆழ்ந்த தூக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பச்சை தண்ணீரில் குளித்து வெட்டவெளியில் வெறும் காலில் மண் தரையில் நடந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மாதம் ஒரு மலை ஏற்றம் போய் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

வழிபாட்டு தலங்களுக்கு சென்றால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உங்கள் மனதிற்கு பிடித்த விசயங்களை செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் பேசினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

அந்தந்த பருவத்தில் விளையும் காய்கனி பழங்கள் கீரைகள் பாரம்பரிய அரிசிகள் சிறுதானியங்கள் பருப்பு பயிறு கிழங்கு வகைகள் என சமச்சீர் உணவு எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

முக்கிய குறிப்பு

அனைவரின் உடலும் ஒன்று கிடையாது

அனைவரின் நோயின் தன்மை ஒன்று கிடையாது

இங்கு நோய்க்கு வைத்தியம் இல்லை

நோயாளிக்குத்தான் வைத்தியம்

ஏற்கனவே பல்வேறு நோய்களுக்கு மருந்து எடுப்பவர்கள் உங்கள் வீட்டு அருகே உள்ள சித்த மருத்துவரின் பரிந்துரை பேரில் மட்டும் இக்கட்டுரையில் உள்ள மருந்துகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

மேலும்

பெரும்பாலும் அனைத்து தரப்பு மக்களுக்கு பொருந்தும் வகையில் தான் இம்மருந்துகளை பரிந்துரை செய்துள்ளேன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இம்மருந்துகளை எடுக்கலாம்

குறிப்பிட்ட அளவில் பாதி அளவு சிறுவர்களுக்கு கொடுக்கலாம்

இந்த சித்த மருந்துகளை நாம் பயன்படுத்தினால்

எத்தனை அலை கொரோனா வந்தாலும் நாம் அதை வெல்லலாம்

சித்த மருந்துகளை பயன்படுத்துவோம்

உயிர்களை காப்போம்

இது

அனைத்தும்

உயிர்

காக்கும்

சித்த

மருந்துகள்

தமிழகத்தில்

அனைவரின்

இல்லத்தில்

நிச்சயம்

இருக்க வேண்டும்

உலகின் உயர் மருத்துவமான

நம் தாய் மருத்துவம் பின்பற்றி

உயிர்களை காப்போம்

நன்றி

இரா.மதிவாணன்

🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மிக அருமை..💐💐 வாழ்த்துக்கள்.தங்கள் சேவை மகத்தானது.
    சுயநலம் இல்லாதது. நன்றி
    தங்களின் கட்டுரை உள்ளவைகளில் எவ்வளவு முடியுமோ அனைத்தையும் தங்களின் வழி காட்டுதலின்படி நிச்சயமாக செய்கிறோம் மிக்க மகிழ்ச்சி அண்ணா மிக்கநன்றி🌸🙏🌸🙏🌸🙏🌷🙏🌷🙏
    தாங்களும் தங்கள் குடும்பத்தினரும்
    நீல் ஆயுள்,நிறை செல்வம்,முழுஆரோக்கியத்தோடு நீடூழி வாழ்க வளமுடன் பலநூறாண்டு...🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸
    (என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி போய் நிற்கும் மக்களுக்கு இந்த மருத்துவ குறிப்புகள் ஒரு கலங்கரை விளக்காக திகழும்.)) அனைவரும் இதனை கடைப்பிடித்தால் தமிழகம் கொரோனா இல்ல மாநிலமாகும்.
    தங்கள் சேவை தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.
    நன்றி.💐💐💐இந்த நேரத்தில் இது அவசியமான ஒன்று
    கரம்கூப்பி வரவேற்கிறோம் ஐயா🙏🙏🙏

    ReplyDelete
  3. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மிகவும் அருமையோ அருமை தம்பி அனைரும் பயன்படுத்தி பயனடைய இத்தகவலை அளித்த உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க உங்கள் நல் இதயம் வளர்க உங்கள் சித்தமருத்துவம்

    ReplyDelete
  5. சிறந்த வழிகாட்டுதல்கள்🙏

    மிக்க நன்றி ங்க 🙏🙏🙏

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்
    நன்றி 🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)