கட்டுரை 49 (30.10.2018)

மரபு பட்டாசு 💥!
-----------------------------



பட்டாசுலையும் மரபா 🤔 என நீங்கள் சிந்திப்பது புரிகிறது, ஆம் நம் முன்னோர்கள் இயற்கை பட்டாசு தயார் செய்து கோவில் திருவிழாக்களில் வெடித்துள்ளார்கள் 💥 தனித்தனியாக வீடுகளில் அல்ல 🤨 என்பது குறிப்பிடத்தக்கது, வாங்க விசயத்திற்கு வருவோம் 🧐

தற்போது சிவகாசியில் தயாரிக்கும் வெடிகள், Phosphorus Base இது சுற்றுசூழலைப் பாதிக்கும், மழை அளவைக் குறைக்கும். நமது முன்னோர்கள் தயாரித்தது, Nitrate Base இது சுற்றுசூழலைப் பாதிக்காது. வேதியலில் இயற்கை, செயற்கை என இருவகை உண்டு, இயற்கை இரசாயனம் நமது சித்தர்கள் கண்ட முறை, ஆங்கிலேயன் கண்ட முறை செயற்கை இரசாயனம்.

முன்னர் கோயில்களில் பொட்லி போடுதல், வேட்டு போடுதல் என்பர். இதனை அண்ணம், கதனை, வாணம், அதிர்வேட்டு என்பர்.

தமிழக கோயில்களில் பருவகாலங்களில் மழைப்பொழிவை வேண்டி பொட்லி என்னும் வேட்டு வெடிப்பார்கள். முன்னோர் போட்ட வெடி (வாண வேடிக்கை என்பர் - இது இரவில் வாண் நோக்கி சென்று வண்ண வண்ணமாய் வெடிப்பது) மேலே சென்று வெடிக்கும்போது மேகங்கள் குளிர்ந்து மழை பொழியும்.

கோவிலில் பொட்லி போட்டால்தான் சாமியே மனம் குளிரும். வெள்ளகோயில் வீரக்குமாரசுவாமிக்கு அதிர்வேட்டு பிரியன் என்ற பெயரும் உண்டு.

இப்பொழுதும் தமிழகத்தில் பெரும்பாலான மரபை பின்பற்றும் கோவில் திருவிழாக்களில்  வருடத்தில் ஒரு நாள் மட்டும் கோவிலில் உள்ள அனைத்து உற்சவர்களும் மங்கள இசை முழங்க, கம கமவென சாம்பிராணி வாசனை ஊரையே தூக்க, கைலாய வாத்தியங்கள் அதிர, ஒரு பெரும் படை போல் ஒரு சேர தங்கள் வாகனங்களில் கம்பீரமாய் எழுந்தருளி வெளியே நகர் வலம் வரும் போது வெடிக்கப்படும் வண்ண வண்ண வாண வேடிக்கையால் ஊரே பக்தி வெள்ளத்தில் மிதக்கும்.

அக்காலத்தில் இந்த வாண வேடிக்கையை காண மக்கள் புளி சோறு கட்டிக்கொண்டு மாட்டு வண்டிகளில் சாரை சாரையாய், சாரை சாரையாய் வந்து பார்ப்பார்கள்.

இந்த வெடி போடும் பழக்கம் ஒரு மிகப்பெரிய வீரக்கலை. இதை அவ்வளவு எளிதாக யாராலும் செய்துவிட முடியாது. தமிழகத்தின் பிரதிபலிப்பை ஓரளவு கொண்ட பக்கத்து மாநிலமான கேரளக்கோயில்களிலும் இப்பழக்கம் உண்டு.

பிரார்த்தனையை நிறைவேற்ற கேரளத்திலும் பல கோயில்களில் இந்த வெடி வெடிக்கும் வழக்கம் உள்ளது. கேரளம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் அதிர்வேட்டு வெடிக்கும் பழக்கம் உள்ளது, 2005 - நிலவரப்படி ஒரு வெடிக்கான காணிக்கை 5 பைசா.

வாருங்கள் அந்த முன்னோர்கள் யார் என்று பார்ப்போம் !
---------------------------------------------------------------------------------

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான வண்ண வண்ண வான வேடிக்கை உருவாக்கி ஊரை மகிழ்வித்தது யாருனு தெரியுங்களா ?
அவர்கள் தான் உப்பிலியர்கள். 

உப்பிலியர் சமூகமே அந்நாளைய கெமிஸ்ஸிட். இவர்கள் உலகிலேயே மிகச்சிறந்து வேதியல் வல்லுனர்களாக திகழ்ந்தார்கள். World's best leading chemists.



பெயர் -  உப்பிலியன்(தமிழ்நாடு)
                உப்பரன் (தெலுங்கு நாடு)
                உப்பாரன் (கன்னடநாடு)

தொழில் - உப்பு விளைத்தல்.

தலைவன் பட்டம் - பட்டக்காரன்
குலப்பட்டம் - செட்டி

உப்பிலியர் சமூகம் உப்பு காய்ச்சுவது அவர்களது குல மரபு மற்றும் குலத் தொழில்.

ஆதாரம் 1: இது குறித்து EDGAR THURSTON என்னும் எழுத்தாளர் தனது  "CASTES AND TRIBES OF SOUTHERN INDIA" என்னும் நூலில் வெளியிட்டுள்ளார்.


இந்நூல் THE LIBRARY OF THE UNIVERSITY OF CALIFORNIA LOS ANGELES ல் உள்ளது. இதை 2007 ல் Digitalise செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதன் link ஐ இங்கு இணைத்துள்ளேன்.

நீங்கள் இலவசமாக இந்நூலை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தென்னிந்திய சாதிகள் அவர்களின் தொழில் பற்றிய வெள்ளையன் எட்கர் தஸ்டன் என்பவரின் ஆவண நூல் இதோ

On Uppara Uppiliyan salt making:


ஆதாரம் 2 : திருவாரூர் கோவிலில் மிகப்பழமையான முரல் ஓவியங்கள் உள்ளது, இதில் வாண வேடிக்கை வெடிப்பது போல் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. இப்படத்தை இக்கட்டுரையில் இணைத்துள்ளேன்.



இவர்கள் தயாரித்த பொருட்களில் சில !
--------------------------------------------------------------------------

1 - மண்ணில் இருந்து சமையல் உப்பு
2 - வெடியுப்பு
3 - இயற்கை பட்டாசு (நாட்டு வெடிகள்)
4 - புதினா உப்பு
5 - ஓம உப்பு
6 - பிரண்டை உப்பு
7 - பச்சை கற்பூரம்
8 - லவண கற்பூரம்
9 - மூலிகை உப்புகள்
10 - தாது உப்புகள்

போன்ற எண்ணிலடங்கா உப்புக்களை தயாரித்ததனாலேயே இவர்களுக்கு உப்பிலியன் என பெயர் வந்தது. உப்பு காய்ச்சுவது தான் இவர்களது தொழில்.
சித்தர்கள் கண்ட முறையான மூலிகைகளில் இருந்து உப்பு எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். இந்த தொழில்நுட்பம் உலகிலேயே எங்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி வாங்க இப்ப இவர்கள் இயற்கை பட்டாசு எப்படி தயாரித்தார்கள்  என்று பார்ப்போம் !
----------------------------------------------------------------------------------

பனிக்காலமான கார்த்திகை, மார்கழியில் கிராமங்களில் உள்ள ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் ஓரம் இதற்கென இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த நிலங்களில் ஒருவகையான ரெட்சாயில் படிந்திருக்கும், சாரமண் என்பர். அந்த சாரமண் கொண்டு உப்பிலியர் உப்புக்காய்ச்சுவர் அப்படி உப்புக்காய்ச்சும் இடத்தை உப்பிலியந்திட்டு என்பர், மேடை போல இருக்கும். பெரிய மொடாக்களில் மேடையில் உப்புக்காய்ச்சுவர். இன்றும் சில ஊர்களில் அதன் அடையாளமான உப்பலியந்திட்டு மட்டுமே எஞ்சி உள்ளதை நீங்கள் பார்க்கலாம்.
இதில் இருந்து சமையல் உப்பு, வெடியுப்பு போன்ற பல்வேறு உப்புகள் தயாரிக்கப்படும்.
அதில் வெடியுப்பை வைத்து கொங்க உப்பிலியன் நாட்டு வெடிகள், வாணம் என்று சொல்லப்படும் வாண வேடிக்கைகள், அண்ணம், கதனை, அதிர்வேட்டுகளை தயாரிப்பர்.
கோவிலில் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு குலக்கடமை உண்டு, கொங்க உப்பிலியர் கோயில் விழாக்களில் பொட்லி போடுவது அவர்களது குலக்கடமை, மரபும் கூட.
கொங்கு உப்பிலிய சமூகம், கொங்கு பதினெட்டு சாதிகளுள் ஒன்று. கொங்கு நாட்டின் பூர்வ குடிகளில் ஒன்று. சாரை மண் கொண்டு உப்பு காய்ச்சுவது, வெடியுப்பு தயார் செய்வது உட்பட கெமிஸ்ட்ரி பணிகளில் இவர்கள் சிறந்தவர்கள்.
வீடுகளில் வெடி வெடிக்கும் பழக்கம் அன்றில்லை. காணியாச்சி கோயிலான குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நாட்டு வெடிகளான வேட்டு வெடிப்பது வழக்கம்.
நாட்டு வெடிகள் சூழலுக்கு உகந்தவை, வெடி வெடிப்பதன் நோக்கமே மழையை ஈர்க்கவே, மேகங்களை ஈர்த்து மழைப்பொழிவை உண்டுபண்ணவே !
மாறாக தற்கால சிவகாசி வெடிகள் மழைப்பொழிவை தடுத்து சூழலைக் கெடுப்பவையாக உள்ளது !
பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என அனைத்தையும் கெடுப்பவை. இது நாட்டிற்கு பேராபத்தாக இருக்கும் காற்று, ஒலி மற்றும் ஒளி மாசுகளை உண்டாக்குகிறது.
50 - 70 டெசிபல் வரை மனிதக் காதுகளால் கேட்கலாம். அதற்கு மேல் போனால் காது செவிடாகும். 95 டெசிபலுக்கு மேல் போனால் மிக மோசமான விளைவுகளை மனித உறுப்புகளுக்கு விளைவிக்கும்.

மண்ணில் இருந்து சமையல் உப்பு !
------------------------------------------------------------------

இந்துப்பை விடவும், கடல் நீரிலிருந்து எடுக்கும் கல் உப்பை விடவும், சார மண்ணில் இருந்து உப்பிலியன் எடுக்கும் உப்பே சிறந்தது.
இப்பொழுதும் உப்பிலியனின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமயமலை பகுதிகளில் ஹிமாலையன் சால்ட் என தயாராகின்றது, ஹிமாலையன் ரெட் சால்ட்.

கடல் நீர் உப்பில் கூட கல்லுப்பு ஓரளவு நல்லதே. ஆனால் அதனையும் வெள்ளைச் சர்க்கரை பாலீஷ் பண்ண ரசாயனங்களை கலப்பது போல, இந்த உப்புக்கும் ரசாயன வேதிப் பொருட்களை கலந்து பாலீஷ் செய்து சுத்த வெள்ளையாக மாற்றி பிரபல பிராண்டாக தருகின்றனர்.

இது பெரும் தீங்கு விளைக்கும், குறிப்பாக கருச்சிதைவு, கருவுறாமை, சிந்தனை தேக்கம், அறிவாற்றல் குறைபாடு, சிறுநீரக கோளாறு, மன பிறழ்வு, தைராய்டு, சிந்திக்கும் திறனில் குறைபாடு, பார்கின்சன் நோய், அல்சைமர் எனப்படும் மூளை ஞாபக மறதி நோய்னு பல நோய்களுக்கு ஆதாரமே இந்த நைஷ் சால்ட் தான்னு எத்தன பேருக்குத் தெரியும்.

இன்று பிரபல பிராண்டாக உள்ள ____உப்பு போன்றவைகள் ____ குடும்பமே இலுமனாட்டிகளின் பினாமிகள், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கூட்டுமூலதனமே ____ குழுமம்.

தூத்துக்குடி உப்பளம் - தற்கால கமர்சியல் வணிகம்.

கற்பூரம் !
------------------

கொங்க உப்பிலியர் (கற்பூர செட்டியார்)
உப்பு காய்ச்சுவது குலத்தொழில். கிணறு தோண்டுவது உட்பட சில பணிகளும் செய்து வந்தார்கள்.

இவர்களில் ஒரு பிரிவினர் கற்பூர செட்டியார் என்போர் அவர்கள் கற்பூரம் தயாரிப்பர் தற்போது கடைகளில் விற்கும் கற்பூரம் பெட்ரோலிய மூலப்பொருள். ஒரிஜனல் கற்பூரம் தயாரிக்க கற்பூர மரம் என்றே உள்ளது. பெட்ரோலிய மூலப்பொருளான தற்போதைய கற்பூரம் போலி.

கற்பூர மரத்தில் இருந்து பச்சை கற்பூரம், லவண கற்பூரம் போன்ற பல்வேறு கற்பூரங்களை இவர்கள் தயாரிப்பார்கள்.

பச்சை கற்பூரம் கோவில் மற்றும் லட்டு போன்ற சில பலகாரங்களுக்கு பயன்படுத்துவார்கள். லவண கற்பூரம் மூலிகைகளுடன் கலந்து வைத்தியர்கள் பயன்படுத்துவார்கள். 
இப்பொழுது இந்த லவண கற்பூரம் எல்லாம் இல்லை.

உப்பிலியர் சமூகத்துக்கு நாயக்கர் பட்டம் உண்டு, அதனாலேயே அவர்கள் உப்பிலிய நாயக்கர் எனவும் அழைக்கப்பட்டனர்

சாலைகள் !

ஒவ்வொரு ஊரிலும் ஆயுத சாலைகளும், மல்யுத்த சாலைகளும், போர்பட்டறைகளும் இருந்துள்ளன. துப்பாக்கி வெள்ளையன் வருவதற்கு முன்னரே இருந்தது. ஆனால் அது பேடிகளின் ஆயுதம் என்று வெள்ளையன் பிரச்சாரம் செய்தான்.

தற்சார்பு !
-------------------

இப்படி மக்கள் இந்நாட்டில் தங்களுக்கு தேவையான உணவு முதல் ஆயுதம் வரை அனைத்தையும் தாங்களாகவே தரமாக தயாரித்து பயன்படுத்தி மகிழ்ச்சியாக நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

இதை எல்லாம் பார்த்த வெள்ளையன் உலகில் இப்படி ஒரு சமூகமா என்று வாயடைத்துப் போனான். இவர்களை அப்படியே விட்டுவிட்டால் நாளை உலகாள வந்துவிடுவார்கள் என்று பயந்தான்.

இதை எல்லாம் கொஞ்சம் கூட பொறுத்துக்கொள்ள முடியாத வெள்ளையன் எப்படியாவது இவர்களை ஒழித்துக்கட்டி விட வேண்டும் என்று பல வல்லுனர்களைக் கொண்டு நூற்றாண்டு காலமாக பல சதித்திட்டங்களை அழகாக வடிவமைத்தான். 

இது தயார் ஆனதும் காலம் கனியும் வரை காத்திருந்தான். நாடகங்களை அரங்கேற்றம் செய்ய வேண்டிய காலம் வந்தது. இதோ அரங்கேற்றம் துவங்கியது.

அதன் முதல் படியாக வணிகம் என்ற பெயரில் நம் நாட்டிற்குள்ளே நுழைந்தான். கொஞ்சம் கொஞ்சமாக நாடு அவன் கைக்கு சென்றது. பின் முழுமையாக கைப்பற்றியதும். இந்நாட்டின் தற்சார்பை உடைக்க அவன் போட்ட சதித்திட்டங்களை 360° கோணத்திலும் ஒவ்வொன்றாக செயல்படுத்த துவங்கினான்.

சூழ்ச்சியின் முதல் பகுதியாக !
---------------------------------------------------------

தற்சார்பை உடைக்க அவன் கையில் எடுத்த முதல் ஆயுதம் சட்டம்.
உப்புவரிச் சட்டம் கொண்டு வந்து உப்பிலியன் உப்புக்காய்ச்சுவதை முடக்கினான்.
ஆயுதப்பறிப்புச் சட்டம் கொண்டு வந்து பட்டறைகளில் ஆயுதத்தயாரிப்பை முடக்கினான்.

இது பேடிகளின் ஆயுதம் என்று கொங்க உப்பிலியர்களுக்கு பேடி பட்டம் சுமத்தி கொங்ககுடி 18-ஐயும் கொத்தடிமைகளாக்கினான்.

இந்த நொடி வரையிலும் நம் பண்பாட்டை சட்டம் கொண்டு சிதைத்து சின்னாபின்னமாக்க முயற்சி நடந்து வருவது உங்களுக்கே தெரியும் (ஐயப்பன் கோவில் பெண்கள் அனுமதி, LGBT, ஜல்லிகட்டு தடை, பெண் வேறு ஒரு ஆணுடன் இருந்தால் தவறு அல்ல)
இதுபோன்ற வெள்ளையனின் சூழ்ச்சிகளாலும், துரோகங்களாலும், உலகிலேயே சிறந்த தொழில்நுட்பமான மண்ணில் இருந்தும், மூலிகைகளில் இருந்தும் உப்பு காய்ச்சும் தொழிலை மிச்சிறப்பாக செய்து வந்த உப்பிலிய குடி பாதை தடுமாறி தன் தொழிலையும், தனித்துவத்தையும் இழந்து பல வேலைகளை தேடி சிதறி சின்னாபின்னமாகிப் போனது.

இந்த வெள்ளையனின் சூழ்ச்சியால் உலகின் மிகச்சிறந்த வேதியல் வல்லுனர்களான உப்பிலியர்கள் தங்கள் உப்பு காய்ச்சும் தொழிலை விட்டுவிட்டு கட்டட பணிகளுக்கு சென்றுவிட்டார்கள்.

சூழ்ச்சியின் இரண்டாம் பகுதி !
----------------------------------------------------------

தற்சார்பை உடைக்க இவர்கள் கையில் எடுத்த இரண்டாவது ஆயுதம் MACAULAY கல்வி முறை.
2000 ஆண்டுகளுக்கு முன்பே
"யாதும் ஊரே, யாவரும் கேளீர்"
என்று கல்வி போதித்த இம்மண்ணில், இவன் கல்வி கற்பிக்க வந்தான்.

செல்வச் செழிப்புடன் மதிப்புமிக்க நாடாக திகழ்ந்த நம் நாட்டின் முதுகெலும்பாக திகழும் ஆன்மீகம், பாரம்பரியம் மற்றும் தொண்மையான பண்டைய குருகுல கல்விமுறையை கண்டு அதிர்ந்து போனான்.

இவற்றை எல்லாம் உடைத்தெறிந்தால் ஒழிய இவர்களை நாம் அடிமைப்படுத்த முடியாது என்று எண்ணி, சொந்தநாடு, மொழி, கலாச்சாரத்தை விட, வெளிநாடு தான் சிறந்தது, ஆங்கில மொழி தான் நல்லது உயர்ந்தது என்று நாமாகவே நினைக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டது தான் இந்த Macaulay கல்விமுறை.

பின் இவர்கள் திட்டத்தின் படி ஆங்கில கல்விமுறை அரங்கேறியது. "காலத்தே பயிர் செய்" என்பது இவனுக்கு தெரிந்திருக்கிறது போல. குழந்தை 7 வயது வரை தன் தாய், குடும்பத்துடன் இருந்தால், இவர்களது உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்ப மரபு அறிவு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டுவிடும் என்பதை நன்கு அறிந்த வெள்ளையன் குறுகிய காலத்திலேயே பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்க்க வைத்தான்.

உலகின் மிச்சிறந்த கல்விமுறை கொண்ட நாடாக திகழும் France நாட்டில் இப்பொழுதும் குழந்தைகளை 7 வயதில் தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?
இப்படி நமது மரபறிவை தடுத்து, அறிவை மழுங்கடித்து, அவன் சொல்வதுதான் உண்மை என நம்மையே நம்ப வைத்து, வெறும் அடிமை வேலை மட்டுமே செய்யக்கூடிய வகையிலும், சுய சிந்தனையை அறவே உதயமாகாத வகையிலும் வடிவமைக்கப்பட்ட இந்த கல்விமுறை வெற்றிகரமாக இந்த நொடிவரை சுயமாக சிந்திக்க தெரியாத, சுய அறிவில்லாத அடிமைகளை, School என்னும் தொழிற்சாலை உருவாக்கி வருகிறது.

இதனால் நமது சுயமரியாதை, பாரம்பரிய விவசாயம், மரபு மருத்துவம், நல்லுணவு, பாரம்பரிய கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள், சொந்த நிலம், ஆரோக்கியம், நல்ல சுற்றுச்சூழல், நிம்மதியான வாழ்க்கை என ஒன்றுவிடாமல் ஒட்டு மொத்தமாக நம் சொந்த தாய்வழியான, பாரம்பரிய கலாச்சாரங்கள் அனைத்தையும் இழந்து வெறும் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறோம்.
எது வளர்ச்சி என்று தெரியாமல், நம்மை உருவாக்கிய, உயிரின் ஆதாரமாய் திகழக்கூடிய இயற்கை அன்னையை அழித்து வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் ஏதேதோ கூத்து நடந்து வருகிறது. 

நாமும் இதற்கெல்லாம் துணை போகிறோம் (நம்மை அப்படி வடிவமைத்துள்ளான்). இது நம் கழுத்தை நாமே அறுத்துவிட்டு நான் வளர்ச்சியடையப் போகிறேன் என்று சொல்வது போல் உள்ளது.

நமக்கு வளர்ச்சியான வாழ்கை தேவை இல்லை, வளமான வாழ்க்கை தேவை, உண்மையான நிரந்தர சொத்தான நம் பாரம்பரிய உணவு, மருத்துவம் மற்றும் கலாச்சாரங்கள் அனைத்தையும் இழந்து பொய்யான தற்காலிக சொத்தான பணத்தை தேடி அலைகிறோம். இது கண்ணை விற்று கண்ணாடி வாங்கும் செயல்.

வெள்ளையன் இந்த சூழ்ச்சி திட்டத்தின் படி, அவனுக்கு நாம் எப்படி தேவைப்பட்டோமோ அது போல் மாறினோம். அவனது ஆதிக்கம் நிறைந்த உண்மையான அடிமை நாடாக இது கொடிகட்டி பறக்கிறது.

சூழ்ச்சியின் மூன்றாம் பகுதி !
-------------------------------------------------------

தற்சார்பை உடைக்க அவர்கள் கையில் எடுத்த மிக முக்கிய ஆயுதம் எது தெரியுங்களா ?
அது தான் சாதி ஒழிப்பு என்னும் பிரம்மாண்ட நாடகம் !

நம் நாட்டின் ஒவ்வொரு குடிகளும் ஒவ்வொரு  துறையில், யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு உலகிலேயே மிகச்சிறந்த வல்லுனர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உலகில் வேறு எங்கும் கிடையாது.

இப்படி ஒவ்வொரு குடியும் அவரவர் துறையில் தனித்திறமைகள் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. 

அனைவரும் மகிழ்ச்சியாய் ஒற்றுமையாய் நிம்மதியாய் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களாகவே தயாரித்து பண்ட மாற்ற முறையில் அழகான தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

இப்பொழுதுதான் உலகவல்லாதிக்க தீய சக்தி ஏற்கனவே தான் போட்ட திட்டத்தின் படி நாடகங்களை அரங்கேற்ற தயாரானது. அப்பொழுது தான் ஒரு கோமாளி இவர்கள் கையில் சிக்கினான். 

யார் அந்த கோமாளி தெரியுங்களா ? அவன் தான் ஈ.வே.ரா (இவனது இழி செயல்களை பதிவிட ஒரு கட்டுரை பற்றாது ஓராயிரம் கட்டுரை வேண்டும்)
அது என்ன திட்டம் தெரியுங்களா ? குள்ளநரி கதை தான், கேட்டால் அதிர்ந்து போவீர்கள் ! ஒற்றுமையாய் இருந்த கூட்டுக்குடும்ப அமைப்பை சிதைத்து, ஒற்றுமையாய் இருந்த சாதிசமூகங்களுக்குள் ஏற்றத்தாழ்வு உருவாக்கி, அமெரிக்க ஐரோப்பிய பெருவணிக நிறுவனங்கள், இங்கே பிற மத கும்பல்களை கொண்டு மதம் மாற்றி, சாதி சமூக கட்டமைப்புகளை உடைத்தெறிந்து, அவர்களை அதிலிருந்து வெளியேற்றி, உலகிலேயே உயர் தொழில்நுட்பம் கொண்ட அந்தந்த சாதிசமூகங்களின் குலத்தொழில்களை ஒட்டுமொத்தமாக தாங்கள் அபகரிப்பதே உலக பெருவணிக நிறுவனங்களின் மாபெரும் திட்டம்.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ! உண்மையில் அக்காலத்தில் சாதிகளுக்குள் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது. அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் சமமாய் மதிக்கப்பட்டார்கள்.

தனித்து வாழ்வது தற்சார்பு அல்ல. உலகில் யாராலும் தனித்து வாழ முடியாது. ஒவ்வொரு சாதிசமூகமும் ஒருவரை ஒருவர் சார்ந்து பண்டமாற்று முறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். இதனால் மனித உறவுகளுக்குள் அன்பு, அறம், ஒழுக்கம், பண்பு, நட்பு, விருந்தோம்பல் அனைத்தும் தழைத்தோங்கியது.

சாதி ஏற்றத் தாழ்வு எல்லாம் தற்காலத்தில் வணிகத்திற்காக இவர்களாக உருவாக்கிய சூழ்ச்சி நாடகங்களே. இந்நாடகத்தின் கதாநாயகனே ஈ.வே.ரா. இப்பதிவின் புனிதத்தை கருதி ஈ.வே.ரா என்னும் ஈனப்பிறவியின் இழி செயல்களை நான் இங்கு பதிவிட விரும்பவில்லை.

உலக பெருவணிக நிறுவனங்கள் தங்களின் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, ஆட்சி அதிகாரம் அனைத்து பேராயுதங்களையும் பயன்படுத்தி தாங்கள் போட்ட திட்டத்தின் படி இந்நாட்டில் ஈ.வே.ரா வை வைத்து நாடகத்தை சீரும் சிறப்புமாக அரங்கேற்றினார்கள்.

பாவம் உண்மை வரலாறு அறியாத, போன தலைமுறை இந்நாடகங்களை எல்லாம் உண்மை என நம்பிவிட்டது. இதுவே பெருவணிக நிறுவனங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.

இவர்கள் சாதி ஒழிக்கிறேன் சாதி ஒழிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, ஒழித்தது அத்தனையும் உங்களது குலதொழில்களை.

இந்த நொடி ஒரு நிமிடம் நிதானமாய் சிந்தியுங்கள் சாதி இன்னும் பள்ளிக்கூட பதிவில் கேட்கும் அளவிற்கு உள்ளது. ஆனால் உங்களது தொழில் எங்கே போனது ? உங்கள் தொழில்கள் அனைத்தையும் உலக வல்லாதிக்க பெருவணிக நிறுவனங்கள் அபகரித்து விட்டது என்பது கசப்பான உண்மை.
குடிகளை அழித்ததும், அன்னிய பொருள் நுழைந்ததும் !

உப்பிலியர் - அழிக்கப்பட்டார் - உலகிலேயே தரமான சாரமண் உப்பு அழிந்து - கொடிய நச்சான Brande Powder Salt வந்தது.

உப்பிலியர் - அழிக்கப்பட்டார் - இயற்கை நாட்டுவெடி அழிந்து - நச்சு இரசாயன பட்டாசு வந்தது.

வாணிய செட்டியார் - அழிக்கப்பட்டார் - தரமான மரச்செக்கு எண்ணெய் அழிந்து - Refined Sunflower oil வந்தது.

நாடார் - அழிக்கப்பட்டார் - ஆரோக்கியம் தரும் பானமான பனந்தெளிவு அழிந்து - பன்னாட்டு Cool drinks வந்தது.

சாணார் - அழிக்கப்பட்டார் - பனங்கருப்பட்டி அழிந்து - கொடிய நச்சான வெள்ளை சர்க்கரை வந்தது.

நாடார் - அழிக்கப்பட்டார் - பனை ஓலை பொருட்கள் அழிந்து - Plastic பொருட்கள் வந்தது.

குயவர் - அழிக்கப்பட்டார் - மண் பானை அழிந்து - Non stick, Aluminium, Plastic பாத்திரங்கள் வந்தது.

வைத்தியர் - அழிக்கப்பட்டார் - மரபு மருத்துவம் அழிந்து - அலோபதி ஆங்கில மருத்துவம் வந்தது.

நாவித மருத்துவச்சி - அழிக்கப்பட்டார் - சுகப்பிரசவம் அழிந்து - அறுத்தெடுக்கும் Cesarean வந்தது.

கொத்தனார் - அழிக்கப்பட்டார் - பசுமை இயற்கை மண் வீடு அழிந்து - பூதம் போல் Cement கட்டிடங்கள் வந்தது.

கம்மாளர் - அழிக்கப்பட்டார் - ஆட்டாங்கல் அம்மிக்கல் அழிந்து - Mixe , Grinder வந்தது.

தச்சர் - அழிக்கப்பட்டார் - மர வேலைப்பாடுகள் அழிந்து - Plastic, Stainless Steel, வந்தது.

செட்டியார் - அழிக்கப்பட்டார் - தரமான உள்ளூர் பொருட்கள் அனைத்தும் அழிந்து - வெளிநாட்டு பொருட்கள் வந்தது.

நெசவாளர் - அழிக்கப்பட்டார் - நாட்டு பருத்து துணி அழிந்து - Plastic Nylon துணி வந்தது.

கைகோளர் - அழிக்கப்பட்டார் - துணிகளுக்கு இயற்கை சாயம் அழிந்து - நச்சு இரசாயன சாயம் வந்தது.

கொல்லர் - அழிக்கப்பட்டார் - இரும்பு சாமான்கள் அழிந்து - பெட்ரோலிய Plastic சாமான்கள் வந்தது.

பொற்கொல்லர் - அழிக்கப்பட்டார் - உண்மையான தங்க நகைகள் அழிந்து - இரும்பு கலந்து விற்கும் பன்னாட்டு நகைக்கடை வந்தது.

தமிழ்புலவர் - அழிக்கப்பட்டார் - தொண்மையான குருகுலம் அழிந்து - முட்டாள்களை உருவாக்கும் School, College வந்தது.

வெள்ளாளர் - அழிக்கப்பட்டார் - பாரம்பரிய இயற்கை விவசாயம் அழிந்து - இரசாயன விவசாயம் வந்தது.

இது போல் இன்னும் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களது திறமைகள் மரபணு (DNA) மூலம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.

குயவர் வாரிசுக்கு சக்கரம் பிடிக்கும். இவனுக்கு மண் பாண்டம் செய்ய யாரும் சொல்லித்தர தேவை இல்லை. வழி வழியாக மரபணுவில் (DNA) கடத்தப்பட்ட திறமை மூலம் இவன் எளிதாக இந்த வேலையை செய்து முடிப்பான். இது போல் தான் அந்தந்த சாதிசனங்களின் திறமைகள் அந்தந்த வழி வந்த இளையதலைமுறையிடம் அவ்வப்போது வெளிப்படும்.

இவனுக்கு வாய்ப்பு கொடுத்து, இந்த மரபணுவை தூண்டி விடுவதன் மூலம் இத்துறையில் உலகிலேயே மிகப்பெரிய வல்லவனாய் திகழ்வான்.

வெள்ளையரின் சாதி ஒழிப்பின் பின்னே உள்ள நோக்கம் இதுதான். கிராமங்கள் இப்படி சுதேசமாக இருந்ததை ஒழித்து, சுதேச நாட்டை சுரண்டி மரபுத்தொழில்களை அழித்து  இன்று ஒட்டு மொத்த வணிகத்தையும் அவனே அபகரித்துக் கொள்ள நடந்த சமூக அழிப்பு வேலை சாதி ஒழிப்பு நாடகங்கள்.

அனைத்து துறைகளிலும் உலகிற்கே முன்உதாரணமாக, முதலாளியாக இருந்த நாம் இன்று இவனுக்கு கூலி வேலை செய்யும் கொத்தடிமைகளானோம். இதை எல்லாம் அவன் நிறுவிய பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் செவ்வனே தனது பணியை மிகச்சிறப்பாக செய்தது. இது தான் இவர்கள் கூறும் வளர்ச்சி.

கோவிலில் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு குலக்கடமை உண்டு; கொங்க உப்பிலியர் கோயில் விழாக்களில் பொட்லி போடுவது அவர்களது குலக்கடமை, மரபும் கூட. இப்படி அனைத்து சாதிசனங்களும், சமமாய், ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தார்கள். அன்றைய மன்னராட்சி நிர்வாகத்தில் அனைத்து சமூக மக்களும் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி நம் தெய்வப்புலவர் குடியின் பெருமை பற்றி என்ன சொல்ராருனு வாங்க பார்ப்போம்.

இதற்கு குடிசெயல்வகை எனும் தனி அதிகாரத்தையே இயற்றி உள்ளார்.

"குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்*
*சுற்றமாச் சுற்றும் உலகு."

குறள் விளக்கம்:
குற்றமில்லாமல் தன்குடியை உயரச் செய்து வாழ்பவனை, உலகத்தவரெல்லாம் தமது சுற்றமாக நினைத்துச் சூழ்வர்.

போதும் ! இனி உலக வல்லாதிக்க தீய சக்திகளின் துரோகங்களுக்கு நாம் வீழ்ந்தது போதும்.

இத்தேசம் மீளவேண்டும் ஒவ்வொரு குடியும் தன் தனித்துவத்தோடு இந்த மண்ணில் வாழவேண்டும்.

நமது குலத்தொழில்கள் அழிக்கப்பட்டாலும் அந்தந்த மக்களின் திறமைகள் அனைத்தும் நமது மரபணுவிற்குள்ளே தான் உள்ளது. அதை தூக்கத்தில் இருந்து எழுப்பி மீண்டும் உயிர் கொடுப்போம்.

அடிமை வேலையை துறப்போம் !
அனைத்து பொருட்களையும் தயாரிப்போம் !
தற்சார்பு வாழ்கை வாழ்வோம் !
உலக மக்களுக்கு நற்பொருட்களை  தருவோம் !

நோய்களில் இருந்து மக்களையும் !
அழிவுத்திட்டங்களில் இருந்து நாட்டையும் !
காக்க தற்சார்பு ஒன்றே சிறந்த வழி !

புதைந்தவற்றை மீட்டெடுப்போம் !
மீட்டவற்றை ஆவணமாக்குவோம் !

உண்மை வரலாறு உங்கள் மரபணுவில் தான் உள்ளது அதை தேடுங்கள் !




நன்றி

வெளியிட்ட தேதி : 30.10.2018

(அடுத்த தலைப்பு : 112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவத்தொகுப்பு)

இரா.மதிவாணன்

🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹

Comments

  1. உங்களுடைய பதிவை பார்த்தேன் பெரியார் பற்றிய உங்களுடைய பார்வை ஒரு குறுகிய வட்டத்தில் அமைந்துள்ளது அவரைப் பற்றி ஒரு இழி பிறவி என்று சொல்வது கண்டிக்கத்தக்கது அவர் சாதி ஒழிப்பில் முன்னின்று போராடியது அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர் எங்கேயுமே தற்சார்பு வாழ்வியல் பற்றிய அவர்கள் இதை செய்யகூடாது என்று அவர் சொன்னது கிடையாது குலத்தொழில் அவரவர் குலத்தொழிலை அவரவர் மட்டுமே செய்ய வேண்டும் என்று விரும்பிய காலத்தில் அந்தத் தொழிலை அவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று எதுவும் கிடையாது என்று சொன்னவர் தான் அவர் அதாவது நீங்கள் சொல்வது எப்படி என்றால் டாக்டர் பையன் டாக்டராக வேண்டும் இன்ஜினியர் பையன் இன்ஜினியர் ஆக வேண்டும் கொத்தனார் பையன் கொத்தனாராக வேண்டும் செருப்பு தைப்பவன் மகன் செருப்பு தைக்க வேண்டும் குலத்தொழிலை நீங்கள் தெளிவாகப் பேசி உளீர்கள் ஒருவர் செய்யும் தொழில் மறு ஒருவர் செய்ய கூடாதா அவர்களகு திறமை கிடையாதா குருகுலம் பற்றி இங்கே சொல்லியுள்ளீர்கள் குருகுல கல்வி என்றால் என்ன என்று என்னவென்று தெரியுமா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே படிக்கும் கல்வி தான் இன்று அனைவரும் படித்துக்கொண்டிருக்கிறோம் அதற்கு காரணம் பெரியார் இங்கே உங்கள் வீட்டு மூதாதையர்கள் குறிப்பாக பெண்களை கேட்டுப் பாருங்கள் எத்தனை பெண்கள் படித்துள்ளார்கள் எப்படி படித்துள்ளார்கள் இவ்வளவு வரலாறு பேசுகிறீர்கள் இங்கே பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின்பு நீங்களே உங்கள் குடும்ப வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் பெரியாருக்கு முன்பே எத்தனை பெண்கள் உங்கள் குடும்பத்தில் பள்ளிக்குச் சென்றார்கள் கல்லூரி சென்றார்கள் பெரியாருக்குப் பின் உங்கள் குடும்பத்தில் எத்தனை பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டு பெரியாரை தவறாக பேசுவது நிச்சயம் நல்ல விஷயம் அல்ல அவர் இல்லையென்றால் நிச்சயம் தமிழ்நாடு தமிழ்நாடு அவை இருந்திருக்காது இன்று நீங்கள் பேசும் ஒவ்வொரு கருத்து சுதந்திரம் அவர்வா ங்கிக் கொடுத்தது இதே வட இந்தியா என்றால் நீங்கள் இவ்வாறு பேச முடியாது இன்று எத்தனையோ பள்ளிகள் கல்லூரிகள் வந்துவிட்டது அத்தனை பள்ளிகளிலும் ஆங்கில என நினைத்துக் கொண்டிருக்கிறான் அத்தனைக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் a commentopening இது நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த நம் தமிழ் மண்ணை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் கையில் உள்ளது அந்த செல்வந்தர்கள் எல்லாம் யார் உங்களுகு தெரியாதா அவர்கள் அனைவரும் யார் என் குலதொழிலீ செய்யலாமே ஒரு தொழில்
    என்பது அவர்ளுக்கு மட்டும் சார்ந்தது கிடையாது அவர்களின் முன்னோர்கள் அந்த காலத்தில் எடுத்தது எல்லாருமே வரும் போது யாருமே பிறக்கும் போது யாரும் கற்றுக் கொண்டு வருவதில்லை அதன் பிறகு கற்றுக்கொள்கிறார்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தொழில் பிடிக்கும் ஆனால் இதைத்தான் செய்ய வேண்டிய நிர்ப்பந்திப்பது நல்ல விஷயமாக இல்லை ஒரு பெரிய ஒரு தற்போது சமூக பொறுப்பில் நீங்கள் தற்சார்பு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் அதில் இவ்வாறு நீங்கள் உங்கள் பதிவை பதிவிடுவது நீங்கள் சாதியை முன்னிறுத்துவது மட்டுமே நான் பார்க்கிறேன் நிச்சயமாக இதில் நீங்கள் சாதியை முன்னிறுத்தி இருக்கிறீர்கள் என்பதை கண்டிப்பாக நான் சொல்கிறேன் உங்கள் பதிவும் அவ்வாறுதான் உள்ளது ஏனென்றால் நீங்கள் குலத்தையும் விரும்புகிறீர்கள் சாதி சாதி ஒழிப்பு பற்றிய ஒரு கண்ணோட்டம் தவறாக உள்ளது தயவுசெய்து ஒரு சமூக பொறுப்புக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள் இவ்வாறு பதிவிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அருமையும், அவசியமும் உங்கள் சேவை இன்று தமிழர்கள் உலகத்துக்கு தேவை.,., நன்று

      Delete
  2. அருமையான பதிவு உப்பிலியர்கள் பயன்படுத்தும் முறைகள் உப்பு தயாரிக்கும் முறைகள் பற்றிய செய்முறை விளக்கம் கொடுத்தால் மக்கள் பின்பற்ற வாய்ப்புள்ளது

    ReplyDelete
  3. இது குறுகிய சாதிய சிந்தனை உள்ள நபரின் கருத்து சித்தர்கள் கருத்து பெரியாரின் கருத்து இன்று எத்தனை பேர் துணி துவைக்கும் சமூகத்திடம் துணிகளை கொடுத்து அவர்களை வாழ உதவுகிறார்கள் இது போல் எத்தனை சமூகத்தின் தொழிலை செய்தாலும் சாதி ஒழிய வில்லை தொழில்நுட்ப ம் ஒழிந்து விட்டது இதற்கு பிற்போக்கு சிந்தனை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் புல்லுருவிகளே காரணம் சுயமாக சிந்திக்கும் திறன் அற்றவர்கள் தொழில் வளர சாதி மத பேதம் இல்லை மருத்துவராக என்ன சாதி மதம் வேண்டும் கூறவும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)