கட்டுரை 27 (26.08.2017)

பட்டாசு, போதும் #பட்டாச்சு !
---------------------------------------------------


நாம் அன்றாட கேட்கும் சப்தத்தின் அளவு சராசரியாக 30 டெஸிபல். மனிதனால் 60 டெசிபல் வரை செவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேட்க முடியும். பல்லுயிர்கலுக்கான டெஸிபலின் அளவு மேலும் குறையலாம்.

ஆனால் பட்டாசின் ஒலி அளவு தெரியுங்களா ? 60 முதல் 120 டெஸிபல் வரை.
125 டெஸிபல் அளவிற்கு பட்டாசு தயாரித்தால் அவர் 1986 ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார். 

சரி பட்டாசில் என்னதான் உள்ளது ? வாருங்கள் பார்ப்போம்.

1 - பொட்டாசியம்
2 - பாஸ்பரஸ்
3 - சல்பர்
4 - துத்தநாகம்
5 - ஆண்டிமோனி சல்பைடு
6 - காட்மியம் காரீயம்
7 - நைட்ரேட்
8 - ஆர்செனிக் பேரியம்
9 - காப்பர் காம்பவுண்ட்
10 - லெட் காம்பவுண்ட்
11 - ஹெக்சா குளோரோ பென்சின்
12 - நைட்ரஜன் டை ஆக்சைட்
13 - லித்தியம் காம்பவுண்ட்
14 - சோடியம்
15 - அலுமினியம் பவுடர்
16 - மேக்னீசியம் பவுடர்
17 - அயர்ன் பவுடர்
18 - பொட்டாசியம் நைட்ரேட்
19 - பொட்டாசியம் பெர்குலோரெட்
20 - ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட்
21 - பொட்டாசியம் குளாரேட்

இந்த 21 இரசாயணங்கள் உங்கள் 21 தலைமுறையை உரு தெரியாமல் அழிக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவை.

பட்டாசால் ஐம்பூதங்கள் பாதிக்கின்றன

#நீர்
---------

பட்டாசு வெடித்தபின் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னாபின்னம் ஆக்கிவிடும். நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. நச்சுக்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசுபடுகிறது.

#நிலம்
--------------

பட்டாசின் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதன் மூலம் நில ஊர்வன உயிர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்  அழித்தொழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மட்கும் குப்பையை கூட மக்க வைக்க முடியாத அளவிற்கு மண் மலடாகிறது.

#நெருப்பு
-------------------

பட்டாசு வெடிக்கும் போது உண்டாகும் வெப்ப மிகுதியால் சுற்றுச்சூழலின் தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது.

#காற்று
----------------

பட்டாசில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் இதன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்ப்படும் புகையால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இதன் மூலம் பறக்கும் இனங்களை இனப்படுகொலை செய்கிறோம்.

#ஆகாயம்
-------------------

21 நச்சு இரசாயனங்கள் வழி மண்டலத்தில் நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை மிக அதிக அளவு உமிழ்கின்றன. இதனால் புவி வெப்பமயமாதல், ஓசோன் மண்டல ஓட்டை போன்ற பேராபத்து நிகழ்கின்றன. 

நம்மை ஆட்டிப்படைக்கும் பஞ்சபூதங்களையே இந்த அளவிற்கு சீரழிக்கும் பட்டாசு நம்மை சும்மா விட்டுவிடுமா என்ன ?

#இதோ #பட்டாசால் #மனிதனுக்கு #ஏற்படும் #பேராபத்துக்கள்.

1 - கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும்
2 - காது கேளாமை
3 - சளி
4 - இருமல்
5 - தும்மல்
6 - ஆஸ்துமா
7 - மூச்சுத்தினறல்
8 - நுரையீரல் புற்றுநோய்
9 - சொரியாஸிஸ்
10 - கண் பார்வை இழப்பு
11 - தைராய்டு
12 - மூளை செயல்பாடு பாதிப்பு
13 - அனீமியா
14 - சிறுநீரக கோளாறு
15 - கல்லீரல் பாதிப்பு
16 - வாந்தி
17 - தலைவலி
18 - வயிறுக் கோளாறுகள்
19 - சைனஸ்
20 - மூக்கு, தொண்டை பாதிப்பு
21 - இரத்த அழுத்தம்
22 - மாரடைப்பு
23 - தூக்கமின்மை
24 - குழந்தையின்மை
25 - புற்றுநோய்

இவை அனைத்து தீபாவளி நமக்கு கொடுக்கும் அன்பு பரிசுகள்.

மனிதனை பாதாளத்தில் தள்ளும் பட்டாசுகள் #பல்லுயிர்களை #சும்மாவிட்டுவிடுமா ?

1 - பறவையின் கரு கலைக்கப்படுகிறது.
2 - பறவை இனங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறது.
2 - நிலஊர்வன உயிர்கள் அழிக்கப்படுகிறது
3 - நிலத்தில் வாழும் பிற உயிர்கள் அழிக்கப்படுகிறது.
3 - நீர்நிலை உயிர்கள் அழிக்கப்படுகிறது

ஒரு நாட்டின் வளமே பல்லுயிர்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. பல்லுயிர்களை அழித்துவிட்டு நாடு எப்படி வளமாகும் ?

நீ இல்லாமல் பல்லுயிர்கள் வாழும்

ஆனால் பல்லுயிர்கள் இல்லாமல் ஒரு நொடி கூட உன்னால் வாழ முடியாது.

#சமுதாய #பாதிப்புகள்
--------------------------------------------

பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை

காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை

ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை

ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை

நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை

வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை

உணவு இல்லையேல் மனிதன் இல்லை

நீ வெடிக்கும் பட்டாசு உனக்கு நீயே வைக்கும் வேட்டு என்று இப்பொழுது புரிகிறதா ?

ஏன் ஆறுகள் வறண்டு உள்ளது என்பது புரிகிறதா ?

ஏன் நமக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என புரிகிறதா ?

ஏன் விவசாயம் அழிந்து வருகிறது என தெரிகிறதா ?

கொண்டாட்டங்கள் அன்பு, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சியை தர வேண்டுமே தவிர அழிவை அல்ல.

#பண்பாடு
---------------------

வீட்டு வாசலில் சாணம் தெளித்து மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?

அரிசிமாவில் கோலமிட்டு எறும்புகளுக்கும், பூச்சிகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?

தானியங்களை அள்ளி இறைத்து பறவைகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?

இன்னும் எத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே போகலாம்.

"#பகுத்துத்துண்டு #பல்லுயிர் #ஓம்புதல்"

என்ற உயர்ந்த நெறியை வாழ்க்கை முறையாக கொண்டு வளர்ந்த நாம்.

#இன்று

கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து உயிர்களையும் அழித்தொழித்துவிட்டு நம்மை நாமே அழித்துகொள்கிறோம்.

பட்டாசு தயாரிப்பவன் கொலைகாரன்

பட்டாசு விற்பவன் கொலைகாரன்

பட்டாசு வாங்கித்தருபவன் கொலைகாரன்

பட்டாசு வெடிப்பவன் கொலைகாரன்

இதற்கு சட்டத்தில் தண்டனை இல்லாவிட்டாலும் கர்மா அடிப்படையில் இவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.

பல்லுயிர்களை அழித்துவிட்டு ஒரு நொடி கூட நம்மால் இந்த மண்ணில் உயிரோடு வாழ முடியாது.

பல்லுயிர்களை வாழவைத்து
நாம் வாழ்வோம்.

வரும் தீபாவளி பண்டிகையில் பல்லுயிர்களை பாதுகாத்து செடி, கொடி, மரங்களை நட்டு "பசுமை தீபாவளியாக" கொண்டாட இன்றே இறைவன் முன்நிலையில் உறுதிமொழி ஏற்போம்.

#பட்டாசுகள் #ஒழியட்டும்
#பல்லுயிர்கள் #தழைக்கட்டும்

நன்றி

வெளியிட்ட தேதி : 26.08.2017

(அடுத்த தலைப்பு : NEET பேராபத்து)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !