கட்டுரை 25 (03.08.2017)

மாத்தி யோசி !
----------------------------


எது எதுவாக மாறினால் நமக்கும்
நம் நாட்டிற்கும் நல்லது என்று பார்ப்போம்.

1. பேக்கரி ~ சிறுதானிய சிற்றுண்டி அடுமனை.

2. தள்ளு வண்டி ~ நல் துரித உணவு

3. புரோட்டா கடை ~ பாரம்பரிய உணவகம்

4. TASMAC ~ பதநீர், இளநீர் விற்பனை நிலையம்

5. Medical Shop ~ நாட்டு மருந்து கடை

6. Hospital ~ மரபு மருத்துவமனை

7. School ~ குருகுலம்

8. Corporate work ~ குல தொழில்

9. பிரமாண்ட வீடு ~ எளிமையான வீடு

10. சாயபட்டரை ~ இயற்கை நிற பட்டரை

11. மளிகை கடை ~ இயற்கை அங்காடிகள்

12. இரசாயன விவசாயம் ~ இயற்கை விவசாயம்

பேக்கரி ~ சிறுதானிய சிற்றுண்டி அடுமனை !
----------------------------------------------------------------

பேக்கரி உரிமையாளர்களே மைதா, வெள்ளை சர்க்கரை, இரசாயண நிறம், சுவை, ரீப்பயிண்டு ஆயில் இவைகளை கொண்டு நீங்கள் விற்பது உணவல்ல நோய். நோயை விற்று ஆரோக்கியம் சம்பாதிக்க முடியாது. தயவு செய்து மேலே குறிப்பிட்ட பொருட்கள் இல்லாமல் பேக்கரி நடத்துங்கள்.

புரோட்டா கடை ~ பாரம்பரிய உணவகம் !
----------------------------------------------------------------------

புரோட்டா கடை உரிமையாளர்களே நீங்கள் விற்பது புரோட்டா அல்ல புற்றுநோய். உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு பசி தாங்க கூடிய சிறுதானிய உணவு ஏற்றது. புரோட்டா விற்று ஒரு புண்ணியம் கிடையாது.

தள்ளு வண்டி ~ நல் துரித உணவு !
-----------------------------------------------------------

நீங்கள் தள்ளு வண்டியால் வாழ்க்கையை நகர்த்தும் அதே வேளையில் பலரை குழிக்குள் தள்ளுவதை மறந்துவிடுகிறீர்கள். இரசாயன நிறம், சுவையூட்டி, அஜின மோட்டோ, பழைய பாமாயில், சோடா உப்பு இவைகளை தவிர்த்து நல் துரித உணவு மக்களுக்கு கொடுங்கள்.

TASMAC ~ பதநீர் !
--------------------------------

நீ வளர்வதற்காக பனை அழித்த பாவி நீ. தமிழ் பெண்களின் தாலி அறுத்த அரக்கன் நீ. உன்னுடை செயலே உன்னை அழிக்கும். TASMAC பதநீர் விற்பனை நிலையமாக மாற வேண்டும்.

Medical Shop ~ நாட்டு மருந்துகடைகள் !
--------------------------------------------------------------------

மருந்து பெயரில் நச்சை கொடுத்து மக்களை நசுக்கும் நயவஞ்சகன் நீ. இவை அனைத்தும் நாட்டு மருந்துகடைகளாக மாற வேண்டும்.

Hospital ~ மரபு மருத்துவமனைகள் !
---------------------------------------------------------------

நீங்கள் வந்ததால் உங்கள் மருத்துவமனையும் நோய்களும் வளர்ந்து மக்களின் ஆரோக்கியம் அதலபாதாளத்திற்கு சென்றது. உங்களால் நோய்க்கான அறிகுறியை மறைக்க தெரியுமே தவிர நோய்களை குணப்படுத முடியாது. Accident போன்ற அவசரத்திற்கு மட்டும் அலோபதி, மீதம் மரபு மருத்துவமனைகளாக மாற வேண்டும்.

School ~ குருகுலம் !
-----------------------------------

அனைவரும் அனைத்தும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓரளவு அடிப்படை அறிவு பெற்ற பின், அவரவருக்கு பிடித்த படிப்பை குறிப்பிட்ட ஆண்டு குறிப்பிட்ட குருவிடம் படிப்பது மட்டுமே சிறந்த திறமைசாலிகளை உருவாக்கும்.

Corporate work ~ குலத்தொழில் !
-------------------------------------------------------

உங்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. வெளிநாட்டுகாரனுக்கு நீங்கள் ஓடி ஓடி வேலை பார்ப்பதால் அவனும், அவனுடைய நாடும் தான் முன்னேறுமே தவிர நீங்கள் கிடையாது. உங்களுடைய குலத்தொழிலை உங்களைவிட  உலகில் வேறு எவராலும் சிறப்பாக செய்ய முடியாது. ஆம் உங்களுடைய மரபனுவில் தொழில்நுட்பமும் திறமைகளும் பதிந்திருக்கும். நம் நாட்டின் நிறுவனங்களில் வேலை செய்து கொண்டோ அல்லது முழு நேரமாகவோ உங்களுடைய குலத்தொழிலை செய்யலாம்.

பிரமாண்ட வீடு ~ எளிமையான வீடு
---------------------------------------------------------------

ஆற்றை சுரண்டியும், மலையை குடைந்தும் பிரம்மாண்ட வீடு கட்டி இயற்கை சீற்றத்தால் பலியாவதை விட, நம் இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எளிமையான தற்சார்பு வீடுகள் அமைக்க வேண்டும்.

சாயப்பட்டரை ~ இயற்கை நிற பட்டரை !
---------------------------------------------------------------------

நீங்கள் துணிக்கு சாயம் ஏற்றுகிறேன் என்ற பெயரில் நம் தமிழ்தாயின் இரத்தநாளங்களான ஆற்றில் நஞ்சை ஏற்றுகிரீர்கள், மனித உடலில் நஞ்சை ஏற்றுகிரீர்கள். இவை அனைத்தும் இயற்கை நிறம் ஏற்றும் பட்டரைகளாக மாற வேண்டும்.

மளிகை கடை ~ இயற்கை அங்காடி !
--------------------------------------------------------------

நீங்கள் அனைவரும் இயற்கை விவசாயிகளிடம் பொருட்களை பெற்று அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இரசாயன விவசாயம் ~ இயற்கை வழி விவசாயம் !
---------------------------------------------------------------------

அட்டை பூச்சி இரத்தத்தை உறிஞ்சுவது போல் மண்ணின் வளத்தை உறிஞ்சி மண்ணை மலடாக்கிவிட்டீர்கள். நீங்கள் விளைவிப்பது உணவல்ல நோய். உங்களுக்காகவும் உங்களை நம்பி உள்ள மக்களுக்காகவும் நீங்கள் அனைவரும் இயற்கை வழி வேளாண்மைக்கு திரும்ப வேண்டும்.

இந்த பன்னிரண்டும் மாறினால்
மக்கள் ஆரோக்கியமடைவார்கள்
நாடு செழிப்படையும்.

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"

ஒன்றினைந்து செயல்படுவோம்
நல் உலகை படைப்போம்.

பன்னிரண்டும் மாறினால்
பாராலுமே நம் நாடு.

நன்றி

வெளியிட்ட தேதி : 03.08.2017

(அடுத்த தலைப்பு : ஆறில் ஆரோக்கியம்)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !