கட்டுரை 10 (26.05.2016)

காத்திருக்க பழகு !
----------------------------------


பசிக்கும் வரை காத்திரு

சுவை உணரும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேரும் வரை காத்திரு

உடல் தன்னனை சீர்படுத்தும் வரை காத்திரு

குழந்தை பிறக்கும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

மரம் மரமாகும் வரை காத்திரு

செக்கு எண்ணெய்யை பிரிக்கும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

"இது உன்னுடயை வாழ்க்கை

ஒட்டப்பந்தையம் அல்ல".

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உனிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததுனாலையே,

உன் வாழ்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் தினிக்கப்படுகிறது

உன் மரபனுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விச உணவுகள் உன் மேல் தினிக்கப்படுகிறது

அவரசம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.

"நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்

உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்"

காத்திருக்க பழகு

வாழப்பழகுவாய்.

வெளியிட்ட தேதி : 26.05.2016

(அடுத்த தலைப்பு : பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவ திருவிழா)

நன்றி

இரா. மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !